இலங்கையில் திடீரென அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள் : முழு விபரம் இதோ

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்,  நாட்டில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ரக பெற்றோல் 05 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

டீசல் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலையும் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 262 ரூபாவாகும்.

இதேவேளை, லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ரகத்தின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.

அத்துடன் லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் விலை 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.

இந்த விலைகளுக்கு ஏற்ப லங்கா ஐஓசி தனது எரிபொருள் விலையையும் திருத்தியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில்,  பஸ்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஒட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பஸ் உரிமையாளர் சங்கம் இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை.

அதேவேளை முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பிலும் எவ்வித அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிiலியில் புகையிரதங்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் எனவும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரதங்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணம் இன்று முதல் 50 ரூபாயாக அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறைந்தபட்ச கட்டணம் 150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, யால மற்றும் பூன்ந்தல சரணாலயங்களில் சுற்றுலாவுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணமும் இன்று முதல் 2,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 4 மணித்தியாலங்கள் சுற்றுலாவில் ஈடுபடும் வாகனங்களுக்காக 15,000 ரூபாய் அறவிடப்படவுள்ளதுடன், நாள் ஒன்றுக்கான கட்டணமாக 30,000 ரூபாய் அறவிடப்படவுள்ளதாக சபாரி (ளயகயசi) ஜீப் ரக வாகன சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் சாதாரண கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் குறித்த சேவைக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாயாக அரவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.