எரிபொருள் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக பத்தரமுல்ல கடுவெல வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இலங்கை போக்குவரத்து சபையின் தலங்கம டிப்போவிற்கு முன்பாகவே குறித்த வீதி தடைப்பட்டுள்ளது.இதனால், குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளில் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.