பூஸா சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனை


பூஸா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.

யுக்திய நடவடிக்கையின்யில் பூஸா சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே கைதியிடமிருந்து கைத்தொலைபேசிகள் , சார்ஜர்கள் , பெட்டரிகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய பொருட்கள் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.