தத்தளிக்கும் அரசாங்கம்- தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த திடீர் அறிவிப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கட்சியின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் தனது டுவிட்டர் பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.

அந்த பதிவில் தொடர்ந்தும் அவர்  தெரிவித்திருப்பதாவது, 

கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விரிவான கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இதற்கு முன்னதாக, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கும் முடிவு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.