இலங்கை மக்கள் தெருக்களில் செத்து மடிவார்கள்! கடுமையான எச்சரிக்கை

ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்திய ரூபாவை இலங்கை பயன்படுத்தும் நிலைமை உருவாகும் எனவும், செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வரலாறு காணாத பெரும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்றும் இலங்கையின் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தெருக்களில் நாட்டு மக்கள் செத்து மடியும் நிலை வரும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது, பொருளாதார சுனாமியின் இரண்டாவது அலை வருமென நான் இதற்கு முன்னர் எரிச்சரித்ததை போன்று தற்போது இரண்டாவது அலை ஆரம்பித்து விட்டது.

இதனை செப்டெம்பர் மாதத்தில் நன்கு உணர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.