இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி இருந்தமை அந்த நாட்டு அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நால்வரும் இலங்கையில் வசித்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் கொழும்பில் வசித்ததாகவும் இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் நேற்று முன்தினம் (20) இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற உளவுத்துறை தகவலுக்கு அமைய குறித்த 4 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் சென்னையில் இருந்து அஹமதாபாத்திற்குச் சென்றுள்ளதுடன் இந்தியாவின் தென் பகுதியில் இருந்து சென்ற பயணிகளின் பட்டியலுக்கு அமைய, அவர்களை அடையாளம் காண முடிந்ததாக இந்திய பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசும் உதவியதாக குஜராத் பொலிஸ் பிரதானி தெரிவித்துள்ளார்.
தற்போது, குறித்த நால்வரும் பாகிஸ்தானில் உள்ள அபு என்ற நபருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் நெருங்கிய தொடர்பைப் பேணியமை தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்காக அபு என்பவர் குறித்த நால்வரையும் ஊக்குவித்துள்ளார்.
இதன்படி தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்த அவர்கள் சம்மதித்துள்ளதுடன் அவர்களுக்கு இலங்கைப் பணத்தில் 400,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக குஜராத் காவல்துறையின் பிரதானி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய 3 துப்பாக்கிகள் மற்றும் 20 குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி சுனில் ஜோஷி (ளுரnடை துழளாi) கூறுகையில், 'குறித்த நபர்களிடம் நடத்திய விசாரணையில், எந்த இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்று கூற மறுத்துவிட்டனர்.
இருப்பினும், தாக்குதல் நடத்தும் இடம், நேரம் பற்றியும், நாச வேலைக்கான வெடிபொருட்கள் கிடைக்கும் இடம் குறித்தும் பாகிஸ்தானில் இருந்து அபு என்ற நபர் தெரிவிப்பார். அவரது உத்தரவுக்காக காத்திருந்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
கைதான 4 பேருக்கும் 14 நாட்கள் பொலிஸ் விளக்கமறியல் அளிக்கப்பட்டு உள்ளது. சிக்கிய செல்போன்களில் உள்ள தகவல்களை சேகரித்து வருகிறோம். பிடிபட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களிடமும் விசாரிக்கப்படும் என்றார்.
குறித்த நால்வரும் இலங்கையில் வசித்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் கொழும்பில் வசித்ததாகவும் இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் நேற்று முன்தினம் (20) இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற உளவுத்துறை தகவலுக்கு அமைய குறித்த 4 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் சென்னையில் இருந்து அஹமதாபாத்திற்குச் சென்றுள்ளதுடன் இந்தியாவின் தென் பகுதியில் இருந்து சென்ற பயணிகளின் பட்டியலுக்கு அமைய, அவர்களை அடையாளம் காண முடிந்ததாக இந்திய பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசும் உதவியதாக குஜராத் பொலிஸ் பிரதானி தெரிவித்துள்ளார்.
தற்போது, குறித்த நால்வரும் பாகிஸ்தானில் உள்ள அபு என்ற நபருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் நெருங்கிய தொடர்பைப் பேணியமை தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்காக அபு என்பவர் குறித்த நால்வரையும் ஊக்குவித்துள்ளார்.
இதன்படி தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்த அவர்கள் சம்மதித்துள்ளதுடன் அவர்களுக்கு இலங்கைப் பணத்தில் 400,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக குஜராத் காவல்துறையின் பிரதானி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய 3 துப்பாக்கிகள் மற்றும் 20 குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி சுனில் ஜோஷி (ளுரnடை துழளாi) கூறுகையில், 'குறித்த நபர்களிடம் நடத்திய விசாரணையில், எந்த இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்று கூற மறுத்துவிட்டனர்.
இருப்பினும், தாக்குதல் நடத்தும் இடம், நேரம் பற்றியும், நாச வேலைக்கான வெடிபொருட்கள் கிடைக்கும் இடம் குறித்தும் பாகிஸ்தானில் இருந்து அபு என்ற நபர் தெரிவிப்பார். அவரது உத்தரவுக்காக காத்திருந்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
கைதான 4 பேருக்கும் 14 நாட்கள் பொலிஸ் விளக்கமறியல் அளிக்கப்பட்டு உள்ளது. சிக்கிய செல்போன்களில் உள்ள தகவல்களை சேகரித்து வருகிறோம். பிடிபட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களிடமும் விசாரிக்கப்படும் என்றார்.
--