வடக்கில் கொண்டுவரப்பட்ட பாரிய திட்டம் - இன்று தொடக்கி வைப்பு!

வட மாகாணத்தில் இரண்டாவது தெங்கு முக்கோண வலயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (02) காலை இடம்பெற்றது.

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில் தெங்கு முக்கோண வலயம் அறிமுகம் செய்யப்பட்டது.

மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவை ஆகிய மாவட்டங்களை இணைத்து இந்த புதிய தெங்கு முக்கோண வலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் தென்னை செய்கையாளர்களுக்கு ஒரு ஏக்கர் தென்னை செய்கைக்கான தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன, இரண்டு வருடங்களில் 3.5 மில்லியன் தென்னங்கன்றுகள் நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.