பிரான்ஸில் தலைமறைவாகியுள்ள பாரிய குற்றவாளி: இலங்கைக்கு அழைத்து வர முயற்சி


பிரான்ஸில் தலைமறைவாகவுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள உலகத் தலைவருமான ஒருவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் சட்ட நடைமுறைக்கமைய, அதற்கு சிறிது காலமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை அவ்வாறே அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு காலம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கை இத்துடன் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அந்த நடவடிக்கை தொடரும் எனவும் அமைச்சர்  மேலும் தெரிவித்துள்ளார்.