சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்..! மூடிய அறைக்குள் இரகசியமாக ஒன்றுகூடிய ரணில்

தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் இரகசியமாக அழைத்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் செயலகத்தில் மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்ற அந்தச் சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக இடம்பெற்றதாக என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் மூவரும் கலந்தாலோசித்த விடயம் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.