சிறிலங்கா கிரிக்கெட் புத்துயிர் பெறுமா..!புதிதாக நியமிக்கப்பட்ட ஐவர்

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முன்னாள் அணித்தலைவர் உபுல் தரங்க தலைமையில் சிறிலங்கா கிரிக்கெட்டுக்கான ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவை உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.

சிறி லங்கா கிரிக்கெட் நிறுவனம் சமர்ப்பித்த 10 பெயர்களில் 7 பெயர்களுக்கு இன்று கூடிய தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுஅனுமதி அளித்துள்ளது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட பெயர்களில் இருந்து தெரிவுக்குழுவிற்கு பின்வரும் ஐந்து உறுப்பினர்களை நியமிக்க  விளையாட்டு அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

உபுல் தரங்கா (தலைவர்),அஜந்தா மெண்டிஸ்,தில்ருவான் பெரேரா,தரங்க பரணவிதான,இந்திக டி சேரம்