இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பு: வெளியான காரணம்

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியதன் காரணமாக விலை அதிகரிப்பு ஏற்பட உள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக குறித்த விலை அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போதைய யுத்த சூழ்நிலையில் கப்பல்கள் சுயஸ் கால்வாயில் பயணிப்பதால், அபாய காப்புறுதி கட்டணத்தை கப்பல் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கப்பல்களின் சரக்குக் கட்டணமும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.