ஆப்கான் ஏ அணியை மீண்டும் வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை


ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டியிலும் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை ஏ அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரை 3–0 என கைப்பற்றியது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று (03) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த ஆப்கான் ஏ அணி ஆரம்பம் தொட்டே தடுமாற்றம் கண்டது. 

ஆப்கானிஸ்தான் அணியின் மூதல் மூன்று விக்கெட்டுகளையும் ஷிராஸ் வீழ்த்த, அந்த அணி தடுமாற்றம் கண்டது.

ஆப்கான் ஏ அணியின் மத்திய வரிசை விக்கெட்டுகளும் மளமளவென்று சரிந்ததால் அந்த அணி 41.2 ஓவர்களில் 185 ஓட்டங்களுக்கே சுருண்டது. 

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த நிஷான் மதுஷ்க தலைமையிலான இலங்கை ஏ அணி 37.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 186 ஓட்டங்களை எட்டியது.


கடைசி வரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்து சூரியபண்டார 109 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 84 ஓட்டங்களை பெற்றார். 


இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான நான்காவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டி நாளை (05) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது