உலக மன நிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான மன உளைச்சலுக்குள்ளான மக்களை கொண்ட நாடுகளில் முன்னணி இடத்தை இலங்கை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சபியன் லப்ஸ் (Sapien Labs) 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் 89 மதிப்பெண்களுடன் மனநலக் கோட்டத்தில் (MHQ) இலங்கை உலகின் 2வது மிக உயர்ந்த தரவரிசையினைப் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் டொமினிகன் குடியரசு முன்னணியில் உள்ள அதே வேளை, டான்சானியா, பனாமா, மலேசியா ஆகிய நாடுகளுடன் இலங்கையும் அடங்கலாக முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளது.
இலங்கையின் சனத்தொகையில் 14% பேர் மட்டுமே உலகளவில் மிகக் குறைவான மன உளைச்சலுக்கு ஆளாவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது பிரேசில், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக அமைகிறது, அங்கு 35% வரையான மக்கள் மனநல சவால்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.