மத்திய வங்கி ஆளுநரால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புதல் தொடர்பாக சில விதிகளை அறிமுகப்படுத்தி, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இவ்விதிகள் ‘2022 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்பும் விதிகள் என எடுத்துக் காட்டப்படுதல் வேண்டும்.16 விதிகள் அடங்கிய இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று நள்ளிரவு வெளியானதுடன் இலங்கைக்கு வெளியில் ஏற்றுமதி செய்யப்படும் எல்லாப் பொருட்கள் அல்லது வழங்கப்படும் பணிகள் தொடர்பில், விடயத்திற் கேற்றவாறு, கப்பலேற் றும் அல்லது பணிகளை வழங்கும் திகதியிலிருந்து நூற்றியெண்பது (180) நாட்களினுள் ஏற்றுமதிப் பெறுகைகளை கட்டாயமாக இலங்கையில் பெறுதல் வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.