ஜனாதிபதி ரணிலுக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி வாழ்த்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி Matamela Cyril Ramaphosa வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தென்னாபிரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நெருங்கிய உறவுகளை மேலும் மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையுடனான உறவுக்கு தென்னாபிரிக்கா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அது பலமான ஒற்றுமை, நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு கொண்டிருப்பதாகவும் தென்னாபிரிக்க ஜனாதிபதி Matamela Cyril Ramaphosa மேலும் குறிப்பிட்டுள்ளார்.