இசைப்பிரியாவுக்காக போராடிய சிங்கள ஊடகவியலாளர் - காலி முகத்திடலில் சம்பவம்

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி காலி முகத்திடலில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவுக்கு நீதி கோரிய பாதைகள் காலி முகத்திடலில் நேற்றையதினம்  காட்சிப்படுத்தப்பட்டன.

குறிப்பாக இந்த நீதி கோரிய ஆர்ப்பாட்டத்தில் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இசைப்பிரியாவின் புகைப்படம் அடங்கிய பதாகையை ஏந்தியிருந்தமை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.