16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் - இருவர் கைது

16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

40 மற்றும் 42 வயதுடைய பசறை வெல்கொல்ல பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.