நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு!

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பேக்கரிப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தமக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.