சமூக வெளிப்புணர்வுக்காக புது ரூட்டில் பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. தொடக்கத்தில் சற்று சரிவை சந்தித்த இந்த சீரியல் அதன் பின்பு மக்கள் மனத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.இதற்கு முக்கிய காரணம் திரைக்கதையும்  பாக்கியலட்சுமி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சுசித்திராவின் அப்பாவித்தனமான நடிப்பு என்று  கூட சொல்லலாம்.

சமீபத்தில் இச்சீரியலில் வரும் எபிசோடுகள் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  காட்சிகள் அமைக்கப்பட்டுவருகின்றது. முன்னய எபிசோட்டில்  எழில், அமிர்தா காதலை வைத்து விதவை மறுமணம்  என்ற சமூக நோக்கத்தையும் கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது . அந்த வகையில் சமீப ஆண்டுகளாக பள்ளிமாணவிகளை கூறி வைத்து பாலியல் தொல்லை  கொடுக்கப்படும் சம்பவம் அரங்கேறி வருவது குறித்து விளிப்புணர்வு எற் ப்படுத்தும் வகையில்    காட்சிகள் அமைக்கப்பட்டடுள்ளது. பள்ளியில் படித்து வரும் இனியாவின் தோழி  நிகிதாவிக்கு ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றார். இதனால் மன உளைசலுக்கு ஆளான நிகிதா இது குறித்து இனியாவிடம் சொல்ல  இனியா தனது தோழிகள் 4 பேருடன் சேர்ந்து பிரின்சிபாலிடம் கம்பிலைண்ட் செய்ய போனபோது இதனை தெரிந்து கொண்ட  அந்த  ஆசிரியர் விசாரணை செய்வது மிரட்டி அனுப்பி விடுகிறார்.

 கம்பிலைண்ட் செய்யப்போனதால் ஆத்திரமடையும் அந்த  ஆசிரியர்   நிகிதாவிக்கு மீண்டும் தொல்லை கொடுக்க மன அழுத்தத்துக்கு ஆளாகும் நிகிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த விஷயம் இனியாவுக்கு தெரியவர அவர்தனது வீட்டில் நடத்த எல்லாவற்றையும்   கூறி அழுகிறாள். இதனை தெரிந்த பாக்கிய , கோபி என்ன செய்ய போகிறார்கள் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.