யாழில் பாடசாலை மாணவன் ஹெரோயினுடன் கைது!

யாழில், பாடசாலை மாணவன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.

கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.