சவுதி - இலங்கை இடையே விரைவில் விமானசேவை: அமைச்சர் உறுதி

சவுதி அரேபிய எயர்லைன்ஸ், சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமானங்களை இயக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சகம் மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

"விமானங்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபிய பொருளாதார விவகார அமைச்சர் கூட்டத்தில் உறுதியளித்தார்.

பல்வேறு நாடுகளுடனான வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னரே தமது விமானங்களை இயக்காத விமான நிறுவனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சினால் முடிந்ததாக கூறப்பட்டுள்ளது.

எயார் சீனா, மலிண்டோ எயர்வேஸ், தாய் எயர் ஏசியா, விஸ்தாரா, எயர் அஸ்தானா, ஸ்பைஸ்ஜெட், எயர் சீஷெல்ஸ் மற்றும் எயர் அரேபியா ஆகிய விமானங்களை இலங்கைக்கு கொண்டு வர முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்."