அட்சய திருதியை நாளில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை!

கொழும்பில் நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் கொழும்பு - ஹோமாகம நகரத்தில் அட்சய திருதியை நாளான இன்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நகைக் கடையிலிருந்த 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் 36 மோதிரங்களும் 8 பெண்டன்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.!

இந்நிலையில், நகைக்கடைக்கு கொள்ளை அடிக்க வந்த கும்பல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்களில் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.