விமான சேவைகள் முடங்கும் ஆபத்து - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள நிலை:

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 24 விமானங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் 11 விமானங்களாக குறைக்கப்படும் என விமான சேவையின் ஸ்ரீலங்கன் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான 24 விமானங்களில் எட்டு விமானங்களின் பயணிக்கும் கால எல்லை அடுத்த ஆண்டு காலாவதியாகும் எனவும், தற்போதைய தினசரி அட்டவணையைப் பராமரிக்க விமானங்களைப் பெறுவது கட்டாயமாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்,