நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்!

நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவக்கூடும் என்பதால், நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருக்க வேண்டாம் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.