ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது.
அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறன.
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் இடம்பெற்றவுள்ளன.
இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதல் முதலாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த அனைத்து உலகக் கிண்ணத் தொடர்களிலும் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
இதற்கான 15 பேர் கொண்ட அணியை மே 1 ஆம் திகதிக்குள் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை அறிவிக்க வேண்டும்
இந்நிலையில் இந்திய அணிக்கு துணைத் தலைவராக நியமிக்கப்பட ரிஷ பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு இடையில் தற்போது போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
கடந்த ஒரு வருடமாக இருபதுக்கு 20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யாதான் அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரின் காயம் மற்றும் மோசமான ஆட்டத்தால் இப்போது அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாறாக ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வந்து ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.