கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 629 பேர் இன்று(செவ்வாய்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 588929 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 12603 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இதன்காரணமாக  இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15055 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561271 ஆக அதிகரித்துள்ளது.