விமான பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு!

இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்களும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய மாற்று விகித அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்படுகின்றது.