பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானம்!

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.மேலும், கொள்கை முடிவுகளின் அடிப்படையில் இந்த அட்டை கட்டாயமாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.அதன்படி, எந்த இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்  என்பதை அமைச்சு எதிர்காலத்தில் முடிவு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.கையடக்கத் தொலைபேசி விண்ணப்பம் மற்றும் முழுமையான தடுப்பூசி நிலைக்கான QR குறியீடு என்பன 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும் அந்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.