ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தனித் தனியாக கலந்துரையாட தீர்மானம் - சுயாதீன கட்சிகளின் பிரதிநிதிகள் குழு

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட ஜனாதிபதி பதவிக்காக முன்னிலையாகும் வேட்பாளர்களுடன் தனித் தனியாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாக ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமான ஒன்பது கட்சிகளின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை, அரசியல் நிலவரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.