வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானம்!

வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய நாளைய தினம்(சனிக்கிழமை) A,B மற்றும் C ஆகிய பிரிவுகளுக்கு 3 மணிநேர மின்வெட்டையும், ஏனைய பிரிவுகளுக்கு 2.30 மணிநேர மின்வெட்டையும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.