கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.மேலும் உயர்தர பரீட்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் விடைத்தாள்களை கொண்டு செல்லும்போது எரிபொருள் இன்மையால் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டதாக கூறினார்.இருப்பினும் பொலிஸாரின் உதவியுடன் அதனை முகாமைத்துவம் செய்ய முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.இதேவேளை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 7 பாடசாலைகள் (கொழும்பு ரோயல், கேகாலை வித்தியாலயம், கண்டி – கிங்ஸ்வூட், கண்டி – சீதாதேவி, காலி – வித்தியாலோக, பதுளை ஊவா மகா வித்தியாலயம், இரத்தினபுரி பெண்கள் கல்லூரி) மாத்திரம் மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.