இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 132 பேருக்கு எதிராக இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.இவர்களில் பெரும்பாலானோர் தற்போது துபாயில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது 95000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது 1630 கிலோகிராம் ஹெரோயின் 15000 கிலோகிராம் கஞ்சா மற்றும் 1377 கிலோகிராம் செயற்கை போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.