வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை

காலியில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13.07.2023) காலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய எஸ்.பி.லசந்த என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (12.07.2023) 10 மணிக்குப் பின்னர் வீட்டிலிருந்து காணாமல்போன குறித்த இளைஞர், இன்று காலை 6 மணியளவில் வீட்டுக்கு 200 மீற்றர் தொலைவில் வெற்றுக்காணியொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துளள்னர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.