புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான நல்லெண்ண தூதுவராக ரஞ்சன்


ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையான ரஞ்சன் ராமநாயக்க புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார டுவிட்டர் பதிவில்,

நான் புலம்பெயர்ந்த தொழிலாளர் நலனை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் நல்லெண்ணத் தூதுவர் பதவியை  விடுதலையான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வழங்கினேன். அதனை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இது வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அவரது அறிவைப் பயன்படுத்துவதற்கான ஒரு தன்னார்வ நிலையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.