பிரதமரின் வீட்டுக்கு தீ; மூவர் கைது


நேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீடு  தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவருள் ஒருவர் 19 வயதான கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் ஏனையவர்கள் கடவத்த மற்றும் காலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.