கோட்டாபய இலங்கை வருவதை விரும்பாத ரணில்! பின்னணி என்ன?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவரது நெருங்கிய அமைச்சர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி தனது குடியுரிமையை இழந்து அமெரிக்கா திரும்ப முடியாமல் போயுள்ளது. எனினும், அமெரிக்காவில் உள்ள தனது மகனின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்ட முன்னாள் ஜனாதிபதி, நீண்ட நாட்களாக அமெரிக்கா செல்ல விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.

அங்கு செல்ல முடியாவிட்டாலும், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவரது மனைவி அயோமா ராஜபக்ச அங்கு செல்லலாம். ஆனால் இந்த நேரத்தில் கணவருடன் இருக்க அவர் முடிவு செய்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மீண்டும் இலங்கைக்கு வரத் தயாராக இருப்பதாகவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

எனினும், கடந்த வாரம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து காரணமாக, தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிக்கு எந்தளவுக்கு வசதி செய்து கொடுக்க தயாராக உள்ளது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.