விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதத்தால் கேட்டதை பேனையால் வழங்க ரணில் முயற்சிக்கிறார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதத்தைக்கொண்டு கேட்டதை பேனாவால் வழங்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலையீட்டினால் மீண்டும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அதிபர் ரணில் முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மகா சங்கத்தினரின் கோரிக்கைகளையும் அதிபர் ரணில் ஏற்று செயல்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் திணிக்கப்பட்ட 13 ம் திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்த ரணில் முயற்சிக்கிறார், இது பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும், இதை உணர்ந்து மகா சங்கத்தினரின் கோரிக்கைகளையும் ஏற்று ரணில் செயல்பட வேண்டும் எனவும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்தத்தின் மூலம், சில பாதுகாப்பு வழிமுறைகள் தகர்க்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.