QR எரிபொருள் முறைமை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் நீக்கப்படும் - கஞ்சன விஜேசேகர!

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறைமை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் நீக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான யோசனை அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.