நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

காலி முகத்திடலில் உள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலைக்கு அருகில் இன்று(செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிலையை அண்மித்த 50 மீற்றர் சுற்றுவட்டார பகுதியில் மக்கள் கூடுவதைத் தடுத்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.