நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ‘ஹொரு கோ கம’ வில் தொடரும் போராட்டம்!

பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள “ஹொரு கோ கம”வில் இன்றும் (வெள்ளிக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடாளுமன்றத்திற்கான பல நுழைவு வீதிகளையும் நேற்று காலை முதல் பொலிஸார் மூடினர்.

இதனையடுத்து, நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து பல்கலைகழக மாணவர் சம்மேளனம் (IUSF) போராட்டம் ஒன்றை நடத்தியது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தியிருந்தனர்.

இதனையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில்  ‘ஹொரு கோ கம“ என்ற பெயரிலான மாதிரி கிராமம் ஒன்றை அமைத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சீரற்ற காலநிலைக்கு மத்தியில், “ஹொரு கோ கம”வில் இன்று காலையும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.