மஹிந்தவின் திருப்பதிக்கு தனிப்பட்ட ஜெட் விமானம் பயணம்-இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் திருப்பதிக்கு மேற்கொண்ட தனிப்பட்ட ஜெட் விமானம் பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.2021 டிசம்பர் 31ம் திகதி ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த தகவலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு எழுத்து மூலமாக குறித்த ஊடகவியலாளருக்கு தெரிவித்துள்ளது.ஜெட் பயணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இது குறித்து ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் பல கேள்வியை எழுப்பியிருந்தன.இந்நிலையில் திருப்பதி பயணத்திற்காக பிரதமரின் நெருங்கிய சகா ஒருவரால் விமானம் பரிசாக வழங்கப்பட்டதாக பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.