தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரிக்கை – மாற்று திட்டத்தை அறிவித்தது அரசு!

தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதற்கமைய கனியவள கூட்டுதாபனத்தின் விலையின் கீழ் இவ்வாறு பொது போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

இதேவேளை தமக்கு போதிய டீசல் கையிருப்பை வழங்க அதிகாரிகள் தவறினால், நாளை பேருந்து சேவையில் இருந்து விலகுவோம் என அவர்கள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.