கொதிநீரில் வீழ்ந்து உயிரிழந்த சிறைக் கைதி!

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீரில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (07) மாலையில் இடம்பெற்றுள்ளது.

கொதிநீர் பீப்பாயில் விழுந்தமையினால் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ காவல் துறையினர் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் உத்தியோகத்தர்கள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.