பிரதமர் மஹிந்த பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளார் – கம்மன்பில

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பௌத்த பிக்குகள் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சில குழுக்களுக்கு தான் பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சிக்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.