லங்கா சதொவில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு!

லங்கா சதொச ஊடாக சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லங்கா சதொச நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று(செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் சீனி, அரிசி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளைப்பூடு ஆகிய பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பெரிய வெங்காயம் 40 ரூபாயாலும் பொன்னி சம்பா 31 ரூபாயாலும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 40 ரூபாயாலு குறைக்கப்பட்டுள்ளது