ஞானசாரர் தலைமையிலான செயலணியின் பதவிக்காலத்தை நீடித்தார் ஜனாதிபதி கோட்டா !!

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவே செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டு அதற்கு தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.