ஜனாதிபதி, கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நாளை!

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நாளை(வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை கழகம் தவிர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன.

இதன்போது தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு குறித்தே அதிக அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.