அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலின் போது நாட்டு மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பில் பிரபல ஜோதிடர் அச்சல திவாகர ஆருடம் வெளியிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ''தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க மக்கள் காத்திருக்கின்றனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தேசிய மக்கள் கட்சியின் பொருளாதார கோட்பாட்டின் பிரதான எதிரியாவர்.
சஜித் பிரேமதாசவின் பொருளாதார திட்டத்திலும் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார திட்டத்திலும் முரண்பாடுகள் உள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிளவுபடுத்தி பொன்சேகாவுடன் இணைந்து வாக்குகளை பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது" என தெரிவித்துள்ளார்.