நாட்டில் இன்றும் மின்தடை அமுல்!

நாட்டில் இன்றும்(புதன்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணித்தியால மின்வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி 15 நிமிட மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.அதேபோல், P,Q,R,S,T,U,V,W பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியால் மின்வெட்டும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணித்தியால மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.