கொழும்பு முழுவதிலும் நாளை மின்வெட்டு!

கொழும்பு முழுவதிலும் நாளை (வியாழக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இத்தனை நாட்களாக மின்சார துண்டிப்பில் இருந்து விலக்கு பெற்ற கொழும்பு வாழ் மக்கள் நாளை முதல் மின் துண்டிப்பை எதிர்கொள்ளவுள்ளனர்.நாடளாவிய ரீதியில் சுழற்ச்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.அதன்படி இன்று A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நான்கு மணி நேரமும் 40 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு நான்கு மணி நேரமும் 30 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.